search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயிற்று கோளாறு"

    வயிற்றுக் கோளாறுகள் ஏற்படச் சர்க்கரை நோயும் ஒரு முக்கிய காரணம். சர்க்கரை நோயால் என்ன மாதிரியான வயிற்று பிரச்னைகள் ஏற்படும், அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
    இதயநோய், பக்கவாதம், மாரடைப்பு என்ற பல்வேறு தொற்ற நோய்களுக்கு நுழைவு வாயிலாக இருப்பது சர்க்கரை நோய். சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கரை நோய், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைக் கசப்பாக்கிவிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்கள் அவ்வளவு எளிதில் ஆறாது. பார்வையும் கூட பாதிக்கப்படும். இதெல்லாம் எல்லோரும் அறிந்தது தான்.

    ஆனால், சர்க்கரை நோய் வயிற்றையும் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. வயிற்றுக் கோளாறுகள் ஏற்படச் சர்க்கரை நோயும் ஒரு முக்கிய காரணம். ஆனால், இதுபற்றி விழிப்புஉணர்வு இல்லாததால், வயிற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மருந்தகத்தில் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். சர்க்கரை நோயால் என்ன மாதிரியான வயிற்று பிரச்னைகள் ஏற்படும், அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

    பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு விதமான வயிற்றுபிரச்சனைகள் வரலாம். ஒன்று 'டயாபடிக் கேஸ்ட்ரோபேரசிஸ்' (Diabetic Gastroparesis) என்ற பிரச்சனை ஏற்படலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதபோது, அது வேகஸ் நரம்புகளைப் பாதிக்கும். இரைப்பையில், 'எவ்வளவு நேரம் உணவு இருக்கலாம்', 'எப்போது சிறுகுடலுக்கு அனுப்ப வேண்டும்' என்பதையெல்லாம் தீர்மானிப்பதும் செரிமானப் பணிகளை ஒழுங்குபடுத்துவதும் இந்த நரம்புகள்தான். இவற்றில் பாதிப்பு ஏற்படும்போது, அஜீரணக் கோளாறுகள், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வீக்கம், மேல் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.

    மற்றொரு பிரச்சனை, 'இன்டெஸ்டினல் எண்ட்ரோபதி' (Intestinal Enteropathy). இந்தப் பிரச்சனையும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காத நிலையில்தான் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும். சில நேரங்களில் இரண்டு பிரச்சனைகளும் மாறிமாறி வரலாம்.



    தீர்வு என்ன?

    வயிற்று உபாதைகளால் அவதிப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் மட்டும் பயன்தராது. அவற்றிலிருந்து விடுபட வேறுசில வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

    * திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * மூன்று வேளைச் சாப்பிடும் உணவின் அளவை, ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடலாம்.

    * மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களைக் கைவிடவேண்டும்.

    * அரிசி போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவைக் குறைத்து நார்ச்சத்து, புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

    * ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியுடன் மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ளவேண்டும்.

    இவற்றைப் பின்பற்றுவதோடு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தால் மட்டுமே, அது நிரந்தர தீர்வாக அமையும்.
    இன்றைய நவீன யூகத்தில் உணவுமுறையில் சில மாறுதல்களை செய்வதன் மூலம் வயிற்று கோளாறுகளை தவிர்க்கலாம். அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. காபி மற்றும் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும்.

    ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.



    இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
    இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.

    ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும்.

    இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். 
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயிற்றுக்கோளாறுகளை நீக்க வல்ல ஓம வாட்டரை வைத்திருப்பது நல்லது. இதில் பக்க விளைவுகள் இல்லை.
    சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வயிற்று உபாதை ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. ருசியான உணவு வகைகளை கண்டதும், வாயை கட்டாது, வயிறு நிறைய உண்டு விட்ட கஷ்டப்படுவது நம் பழக்கம். இதனால் நமக்கு வயிற்று வலி ஏற்படுகிறது.

    முதலில் இந்த வயிற்று வலி எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். நமது இரைப்பையின் உள் தசைச்சுவர்கள் எந்நேரமும் அலை போன்ற அசைவுகளை கொண்டு இருக்கும்.

    இதனை தசை இயக்கம் என்கிறார்கள். நாம் நம் உடலுக்கு ஒத்துவராத உணவுகளை உட்கொள்ளும் போது அது இரைப்பையை அடையும் நிலையில் இரைப்பை செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

    இந்த உணவு இரைப்பையின் அசைவை சிதைக்கிறது. இந்த சிதைவையே நாம் வயிற்றுவலியாக உணர்கிறோம். நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் உடனே டாக்டரை தேடி ஓடலாம் அல்லது 24 மணி நேரமும் திறந்து இருக்கும் மருந்து கடைகளை நாடி செல்லலாம். ஆனால் கிராமப்புற மக்கள் இதைப்போன்ற வசதிகளை எதிர்பார்க்க முடியாது.

    எனவே கைவசம் இவ்வாறு வயிற்றுக்கோளாறுகளை நீக்க வல்ல ஓம வாட்டரை வைத்திருப்பது நல்லது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. பக்க விளைவுகள் இல்லை. மருத்துவ குணங்கள் பல உடையது.

    செய்முறையும் எளிது. செலவும் மிக குறைவு. எனவே லாபம் அதிகமான தொழிலாக இதனை வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம். 
    ×